தெளிவத்தை ஜோசப்பின் மூன்று நூல்கள் வெளியீடு
🕔 November 5, 2016
– க. கிஷாந்தன் –
எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘நாம் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’, ‘காலங்கள் சாவதில்லை’ மற்றும் ‘நாமிருக்கும் நாடே’ ஆகிய மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று சனிக்கிழமை ஹட்டன் சமூக நிறுவனத்தில் இடம்பெற்றது.
பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் தலைமையில், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், விசேட அதிதியாக மூத்த கவிஞர் அல் -அஸுமத் கலந்து கொண்டார்.
இந்நூலை பாக்கியா பதிப்பக உரிமையாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லியப்பு சந்தி திலகர் வெளியிட்டு வைத்தார்.
மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை லுணுகலை ஸ்ரீயும், நூல் அறிமுகவுரையை சுப்பையா கமலதாசனும் நிகழ்த்தினர்.
‘நாம் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ என்ற நூலின் ஆய்வுரையை ஜே. லெனின்மதிவானம், மற்றும் ‘நாமிருக்கும் நாடே’ நூலின் ஆய்வுரையை எம்.எம். ஜெயசீலனும் வழங்கினர்.
கருத்துரையை கவிஞர் வே. தினகரன் மற்றும் எழுத்தாளர் சிவனு மனோகரன் ஆகியோர் நிகழ்த்தினர்.