248 மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற, சீனப் பெண் கைது

🕔 October 21, 2016

gem-arrest-0334பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து சீனாவுக்குக் கடத்த முற்பட்ட 26 வயதுடைய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

11.64 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்களையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களையும் கட்டு நாயக்க விமான நிலையத்தினூடாக சீனாவுக்கு இவர் கடத்த முற்பட்ட வேளை, இலங்கை சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

12 வகையான 248 மாணிக்கக் கற்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இலங்கை நாணயம் 26,680  ரூபாய், சீன நாணயம் 16, 900 யுவான் மற்றும் 1650 அமெரிக்க டொலர்களும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில், இவர் சுற்றுலா முகவராகத் தொழில் செய்பவர் எனக் கூறப்படுகிறது.

சுங்க அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்