பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப்

🕔 August 12, 2016

Imran MP - 9865கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ – தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

எனினும், விண்ணப்பதாரியின் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால்,  மேற்படி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தினை பல பட்டதாரிகள் இழக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரிகளுக்குரிய  வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்து,  கிழக்கு மாகாண ஆளுநருக்கு – தான் கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்ததாகவும், அதற்கான பதிலிலேயே விண்ணப்பதாரிகளுக்கான வயதெல்லை, 40 ஆக அதிகரிகப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என்றும் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்