சர்மிளா: பதினாறு வருட உண்ணா விரதத்துக்கு முடிவு

🕔 August 9, 2016

Irom sharmila - 013தினாறு ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டு வந்த இரும்பு பெண் என்று அழைக்கப்படும், இந்தியா மணிப்பூர் பகுதியை சேர்ந்த இரோம் சர்மிளா தனதுஉண்ணாவிரத போராட்டத்தை இன்று செவ்வாய்கிழமை கைவிட்டுள்ளார்.

இந்திய பாதுகாப்பு படையினரால் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், பாதுகாப்பு படையினருக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த சட்டத்தை நீக்க கோரி சர்மிளா 16வருடங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஆயினும், அழுத்தங்களின் மத்தியில் இவருக்கு மூக்கினூடாகஉணவு மற்றும் நீரினை அதிகாரிகள் வழங்கி வந்தனர்.

இது தொடர்பில் இரோம் சர்மிளா தெரிவிக்கையில்; தான் 16 வருடங்களாக உண்ணாவிரதம்மேற்கொண்டும் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என்றார்.

ஆயினும், அரசியல்ரீதியாக தான் போராடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்