பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ்

சுமார் 40 வயதான பெண்ணொருவர், இசுருபுர – லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்தபோது, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, காயமடைந்த அவர், வெலிஅத்த – ஹத்போதிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.
காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வெலிஅத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.