டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து
– க. கிஷாந்தன் –
ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில், கொழும்பு – பதுளை பிரதான வீதியில், டீசல் பௌசர் ஒன்று கவிழ்ந்து செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது.
இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி, தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டீசலை அகற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விமானப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.