விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை

🕔 July 1, 2016

Udaya gammanpila - 097மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலையான கம்மன்பில, 25 ஆயிரம் ரொக்கப்பிணை மற்றும் 05 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றின் 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை, சட்டவிரோதமான முறையில் போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பில விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்