வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

🕔 June 20, 2016

Hakeem - 098
– ஜெம்சாத் இக்பால் –

த்திய மாகாணத்தில், பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் பங்குபற்றுதலுடன் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்தி சமரசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளின் மாவட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயிமுல்லாஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கட்டுகஸ்தோட்டை, தெல்தொட்டை, கலகெதர மற்றும் அக்குறனை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கை, தம்புள்ளை மற்றும் ரிகிலகஸ்கட ஆதார வைத்தியசாலைகளின் புதிய கட்டட வசதிகள், மருத்துவ உபகரணங்களின் தேவை, தாதிமார் நியமனம் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவற்றுக்காக 1500 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்