ஜே.வி.பி. முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மரணம்
ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும் மக்கள் ஊழியர் கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ஸ அமரசிங்க, இன்று புதன்கிழமை 73ஆவது வயதில் மரணமடைந்தார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இன்று காலை அவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி.யின் ஆரம்பகால தலைவராக செயற்பட்டு வந்த சோமவன்ஸ அமரசிங்க, கட்சியின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஊக்கமளித்து, சிறந்த ஆலோசனைகளை வழங்கிவந்தார். இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் கட்சியை விட்டு விலகினார்.
ஆரம்பத்தில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்து வந்த சோமவன்ஸ, பின்னர், ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் மேடையேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.