119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல் 0
பொலிஸ் அவசர தொலைபேசி சேவையான 119ஐ அழைத்து, பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 40 வயதான மேற்படி நபரைக் கைது செய்த பொலிஸார், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.