தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் 19 பேருக்கு ஓய்வூதியம் இல்லை 0
– அஹமட் – 08ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவடைதற்கு 06 மாதங்கள் முன்னதாகவே கலைக்கப்பட்டுள்ளமை காரணமாக, 19 தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவுடன் கலைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் தமிழர்களும், முஸ்லிம்களுமாக மொத்தம் 49 பேர்