இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை 0
இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது. ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புபட்ட மேலும் எட்டுப்பேர் இன்றைய தினம் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த வழக்குகின் சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா