Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி"

சுதந்திரக் கட்சித் தலைமைகளத்தினுள் நுழையத் தடை

சுதந்திரக் கட்சித் தலைமைகளத்தினுள் நுழையத் தடை 0

🕔6.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, அந்தக்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை

சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை 0

🕔4.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔1.Apr 2024

துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை – கட்சியில் அவர்கள் வகித்த பதவிகளில்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம்

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம் 0

🕔30.Mar 2024

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ராஜாங்க அமைச்சர்  லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் – செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடை

தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடை 0

🕔8.Jan 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தவறான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளளது.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு 0

🕔1.Jan 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவர் அம்பலாங்கொட தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். விஜயலால் இன்று (01) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்

மேலும்...
“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு

“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றம் தொடர்பில், குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) அதிருப்தி வெளியிட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக டொக்டர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
தயாசிறியின் மனு நிராகரிப்பு

தயாசிறியின் மனு நிராகரிப்பு 0

🕔8.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் கட்சியின் தீர்மானத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சியில் தனது உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்றைய

மேலும்...
அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு 0

🕔6.Jun 2023

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (5) மாலை கூடிய போது, இவ்விடயம் ஆராயப்பட்டது. “அரசாங்கத்தில் இணைந்த 09 நாடாளுமுன்ற உறுப்பினர்கள் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த எம்.பி.க்கள் தொடர்பாகவும், நாங்கள்

மேலும்...
ஜா – எல பிரதேச சபைக்கு, சுதந்திரக் கட்சி சார்பில் உறுப்பினர்களை நியமிக்க நீதிமன்றம் தடை உத்தரவு

ஜா – எல பிரதேச சபைக்கு, சுதந்திரக் கட்சி சார்பில் உறுப்பினர்களை நியமிக்க நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔23.Feb 2023

ஜா – எல பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக, வாதிகள் மூவரின் இடத்துக்கு வேறு எவரையும் நியமிக்க தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக இந்த

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல் 0

🕔21.Jan 2022

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற

மேலும்...
அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் 0

🕔17.Jan 2022

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில்

மேலும்...
சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔10.Jan 2022

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை குழம்பில் உள்ள கறிவேப்பில்லை போல் தூக்கி எறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில்

மேலும்...
மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் மீது, பொதுஜன பெரமுன உறுப்பினர் தாக்குதல்

மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் மீது, பொதுஜன பெரமுன உறுப்பினர் தாக்குதல் 0

🕔13.Dec 2021

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (13) தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் இடம் பெற்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபை எல்லைக்குள்

மேலும்...
நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். நாட்டை நேசிக்கும் ஊழலற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்