வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 08 கோடி ரூபாவை இழந்தவர்கள்: சாணக்கியன் எம்.பியை சந்தித்து, நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை 0
– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறையிட்டுள்ளனர். 08 கோடி ரூபாவினை – போலி முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரியும் நாடாளுமன்ற உறுப்பினரிடம்