பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை 0
புனித ஹஜ்பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் இன்றைய தினத்தில், இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையும், பிரசங்கமும் இடம்பெற்றன. மௌலவி ஐ.எல். ஹாசிம் (மதனி) தொழுகையையும், பிரசங்கத்தினையும் தலைமையேற்று நடத்தினார்.