கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’? 0
– றிப்திஅலி – கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களும் பொது வெளியில் உருவாகியுள்ளன. கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீபினால் – மாநகர சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றுவதற்காக, கடமைப் பட்டியல் வழங்கப்பட்ட வேலைத்