Back to homepage

Tag "மஹிந்த அமரவீர"

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம்

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம் 0

🕔30.Mar 2024

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ராஜாங்க அமைச்சர்  லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் – செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம் 0

🕔9.Feb 2024

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நெல் ஆலை உரிமையாளர்கள், நெல்லை களஞ்சியப்படுத்தும் நபர்கள் மற்றும் நெல்லை சேகரிப்பவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் அரசு மற்றும் தனியார்

மேலும்...
பன்றிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 5000 கோழிக் குஞ்சுகளை, வேலையற்றோருக்கு வழங்க நடவடிக்கை

பன்றிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 5000 கோழிக் குஞ்சுகளை, வேலையற்றோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔12.Dec 2023

பன்றிகளுக்கு உணவாக, வாரத்துக்கு 5,000க்கும் மேற்பட்ட சேவல் கோழிக் குஞ்சுகள் பயன்படுத்தப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் சேவல் குஞ்சுகள் – எந்தவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பன்றிகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது, எனவே தற்போது தொழில் இல்லாதோருக்கு – இந்தக்

மேலும்...
‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர்

‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர் 0

🕔6.Nov 2023

எம்ஒபி (MoP) உரத்தின் விலையை மேலும் 50 வீதத்தால் குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல ஒமர கிராமத்தை இரண்டாம் கட்ட விவசாய வணிக கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணியை நேற்று (05) ஆரம்பித்து வைத்த போது அவர் இதனைக் கூறினார். அமைச்சரவை பத்திரத்துக்கு

மேலும்...
07 கோடி ரூபாய் பெறுமதியான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து மாயம்: இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம்

07 கோடி ரூபாய் பெறுமதியான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து மாயம்: இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் 0

🕔30.Oct 2023

நெற் சந்தைப்படுத்தும் அதிகாரசபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 07 லட்சம் கிலோ நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் உள்ள அரசின் 05 நெல் களஞ்சியசாலையிலிருந்து மேற்படி தொகை நெல் காணாமல் போயுள்ளதாக அவர்

மேலும்...
மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை

மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை 0

🕔12.Oct 2023

பெரும்போகத்தில், மரக்கறி மற்றும் ஏனைய பயிர்ச் செய்கையில் ஈடுபடும் 3 மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரம் விவசாயிகளுக்கு உரத்தை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, விவசாயி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய

மேலும்...
சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி 0

🕔10.Sep 2023

சீரற்ற காலநிலையினால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; கடுமையான வறட்சி மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த பெரும்மழை ஆகியவற்றினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு

மேலும்...
வறட்சி இழப்பீடு; 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

வறட்சி இழப்பீடு; 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்: விவசாய அமைச்சர் 0

🕔29.Aug 2023

நிலவும் வறட்சியான காலநிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக, 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சோயா அவரை ஆகிய பயிர் சேதங்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். ஏனைய

மேலும்...
வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு

வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு 0

🕔7.Aug 2023

வரட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடமத்திய மாகாண விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கமநல காப்புறுதி சபையின் தலைவர் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகரவுக்கு இந்த உத்தரவை விவசாய

மேலும்...
எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க  தீர்மானம்

எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க தீர்மானம் 0

🕔5.Aug 2023

அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த பெரும் போகத்தில் எம்ஒபி (MOP) உரம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதவிர, மற்றொரு ரக உரத்தின் விலையை குறைக்கவும், உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகி, உரத்தினை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர்

மேலும்...
10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔18.Jul 2023

பத்து வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் விவசாய தேவையில்

மேலும்...
நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம்

நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம் 0

🕔16.Jul 2023

நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்வரும் பெரும்போகத்தில் மற்றுமொரு ரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2023 பெரும்போகம் மற்றும் 2024 ஆம் ஆண்டு நெற்சைய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேலும் ஒரு ரசாயன உரம் – இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இந்த வருடம் மூன்று

மேலும்...
எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது

எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது 0

🕔14.Jul 2023

எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு எனப்படும் உரத்தின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கிலோகிராம் எடையுள்ள எம்ஒபி உர மூடையின் விலையினை 1000 ரூபாயினால் குறைக்கவுள்ளதாக விவசாச அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இதற்கமைய ஒரு

மேலும்...
யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர் 0

🕔12.Jun 2023

யூரியா உர மூட்டை ஒன்று ரூ.5,000க்கும் குறைவான விலையில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்வரும் பெரும் போகத்திலில் இருந்து விவசாயிகளுக்கு மேற்படி விலைக்குறைப்புடன் யூரியா கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மூன்று போகங்களுக்குப் பின்னர் எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு மூன்று வகையான உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
யூரியா விலை குறைகிறது

யூரியா விலை குறைகிறது 0

🕔31.May 2023

அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட யூரியா உரம் மூடை ஒன்றின் விலை எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படுகின்ற 50 கிலோகிராம் எடை கொண்ட யூரியா உர மூடையை 9 ஆயிரம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்