தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0
இலங்கையில் தாய் – சேய் மரணவீதம் குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை ஏனைய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதுவாகும் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கர்ப்ப காலப்பகுதியில் அல்லது மகப்பேற்றின் பின்னரான 42 நாட்களுக்குள் அல்லது கர்ப்பிணிப்