மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை 0
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 7727 வாக்காளர்களின் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் டாப்பிலிருந்து நீக்கியுள்ளனர் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு