கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம் 0
– முகம்மது தம்பி மரைக்கார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் பெருங்கனவாக, ஒலுவில் துறைமுகம் இருந்தது. ஆனால், அதே துறைமுகத்தை மூடிவிடுமாறு, அவருடைய கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர் பைஸால் காசிம் இப்போது கூறுகிறார். அந்தத் துறைமுகம் இருந்தால், ஒலுவில் பிரதேசமும் தனது சொந்த ஊரான நிந்தவூர் உள்ளிட்ட சில பிரதேசங்களும் கடலரிப்பால்