பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்: மட்டக்களப்பில் பரபரப்பு 0
– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு புதூர் பகுதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் துப்பாக்கியை நபரொருவர் பறித்துக் கொண்டு ஓடியமையினை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து அங்கு ராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் சுற்றி வளைப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு புதூர் திமில தீவுப்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை