புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர் 0
தமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல், புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டவரைவு – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தாங்கள் தீர்மானித்திருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, புதிய தேர்தல் முறைமை விடயத்தில், எமது