குயில்களின் சொந்தக்காரி 0
இந்திய பின்னணிப் பாடகி பி. சுசீலா – ஒரு தடவை தெலுங்கு திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இசையமைக்க, பாடலை பாடகர் முழுமையாக பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுதான் அப்போதிருந்த முறைமையாகும்.