Back to homepage

Tag "பாணந்துறை"

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔13.Feb 2024

அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இந்த தீர்ப்பை வழங்கினார். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பாணந்துறை – அட்டுலுகம பிரதேசத்தில் இந்தக்

மேலும்...
வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது

வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔19.Aug 2023

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை – போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் வாடகைக்கு எடுத்து, அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்களும், 36

மேலும்...
இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது 0

🕔16.Jun 2023

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு வெளியே பஸ்ஸை ஓட்ட அனுமதிப்பதற்காக, சந்தேக நபர் 15 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டபோது கைதானார். குறித்த பிராந்திய

மேலும்...
பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல்

பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல் 0

🕔29.Jan 2022

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) கைது செய்யப்பட்ட பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாணந்துறை மேலதிக நீதவான் இந்த உத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளார். 150,000 ரூபாவை லஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். லஞ்ச,

மேலும்...
பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு, 06 ஆண்டுகள் கடூழிய சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு, 06 ஆண்டுகள் கடூழிய சிறை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔21.Jan 2021

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 06 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 06 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம்

மேலும்...
பாணந்துறையில் முஸ்லிம் – சிங்களவர் மோதல்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

பாணந்துறையில் முஸ்லிம் – சிங்களவர் மோதல்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔21.Mar 2019

பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வாகன விபத்தொன்றினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம்

மேலும்...
மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔29.Aug 2017

மாணவர் ஒருவரை தரம் ஒன்றுக்கு வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, லஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று செவ்வாய்கிழமை மேற்படி தண்டனையினை விதித்து தீர்ப்பளித்தது. பாணந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, குறித்த அதிபர் 25,000 ரூபா பணத்தை

மேலும்...
மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம்

மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம் 0

🕔20.Jul 2017

தனக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருக்குமளவுக்கு, நெருங்கிய நண்பரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மிக நீண்ட காலத்தின் பின்னர், நபர் ஒருவர் சந்தித்திக்க வந்த நெகிழ்ச்சியான தருணமொன்று நேற்று புதன்கிழமை பாணந்துறையில் இடம்டபெற்றது. ‘மதுவில் இருந்து விடுதலையான நாடு’ தேசிய வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட மாநாடு, நேற்று பாணந்துறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில்

மேலும்...
விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது 0

🕔1.Jun 2016

தாய்லாந்து பெண்கள் மூவர் உட்பட 13 பெண்களை பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் விபசாரத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலவத்துக்கொடயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில், பெண்ணொருவரினால் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையமொன்றிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தாய்லாந்துப் பெண்கள் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள், சுற்றுலா வீசாவில்

மேலும்...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ் 0

🕔9.May 2016

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பாணந்துறை வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளன. வீட்டின் முன் நுழைவாயில் பகுதியில்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் இருந்த போதும், திருடர்கள் மற்றொரு வாயிற் பகுதி ஊடாக, குறித்த வீட்டின் உள்ளே

மேலும்...
விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது 0

🕔5.Apr 2016

ஆசிரியை ஒருவரை தும்புத் தடியினால் தாக்கிய பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்துக்கு சென்ற ஆசிரியையையே, இவ்வாறு அதிபர் தாக்கியுள்ளார்.இந்த ஆசிரியையின் பிள்ளைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், தனக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் ஆசிரியை கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்புத் தடியினால் அதிபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்