நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம் 0
– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர், சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சிக்கிக்கொண்டார்.இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது. அதில் சிறைக் கைதி ஒருவர் ஆஜர் செய்யப்பட்டார். அந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரும் மன்றில் முன்னிலையானார்.