தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம் 0
– அஹமட் – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், பெருமளவான பொதுமக்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி, அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் விநியோகித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பரவுதல் காரணமாக கடந்த 16 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.