கொரோனா நிபுணர் குழுவுக்குள் சர்ச்சை; உடல்களை அடக்க மறுப்பதை ஆட்சேபித்து பலர் ராஜினாமா 0
கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு தொடர்ச்சியாக இருப்பதை ஆட்சேபித்து, அக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய பல வைத்தியசர்களும், நிபுணர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அரச சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சன்ன பெரேரா தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்ட பின்னர், இவர்கள் ராஜினாமா செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர்.