Back to homepage

Tag "திருக்கோவில்"

தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔8.Apr 2024

– முன்ஸிப் – தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அரச வங்கி கிளையொன்றில் – ஏமாற்றி அடகு வைத்து பணம் பெற்றார் எனும் குற்றச்சாட்டில், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹஸீப் தலைமையிலான குழுவினர் இன்று (08) கைது செய்தனர். அக்கரைப்பற்று – சாகாமம்

மேலும்...
சங்கமன் கிராமத்தில் யானை உடைத்த வீடு: உரியவர்களிடம் முறையிட்டும் யாரும் வரவில்லை என புகார்

சங்கமன் கிராமத்தில் யானை உடைத்த வீடு: உரியவர்களிடம் முறையிட்டும் யாரும் வரவில்லை என புகார் 0

🕔4.Apr 2024

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன் கிராமத்தில் வயோதிப தம்பதியினரின் வீடொன்று, கடந்த 01ஆம் திகதி அதிகாலை – யானையின் தாக்குதலுக்கு உள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் மற்றும் கிராம அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை யாரும் களத்துக்கு வருகை தரவில்லை தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டை யானை தாக்கிய தினம், அங்கு வசிக்கும் வயதான கணவன்

மேலும்...
மரதன் ஓடிய மாணவன் மரணம்; மூடிக் கிடக்கும் திருக்கோவில் வைத்தியசாலை: நடந்தவை என்ன?

மரதன் ஓடிய மாணவன் மரணம்; மூடிக் கிடக்கும் திருக்கோவில் வைத்தியசாலை: நடந்தவை என்ன? 0

🕔24.Mar 2024

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரதன் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மறுபுறம், அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலை இம்மாதம்

மேலும்...
மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம் 0

🕔11.Mar 2024

– பாறுக் ஷிஹான் – திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போது இன்று (11) காலை மரணமடைந்தார். இதனையடுத்து  திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது, 

மேலும்...
திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு 0

🕔28.Feb 2022

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (28) கையளிக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் குறித்த அம்புலன்ஸ் வண்டிகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் கையளித்தார்.  இந்த

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔30.Dec 2021

– சரவணன் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து, அங்கு கடமையாற்றிவரும் அனைத்து பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை இடம் பெற்றுவருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 24 ஆம் திகதி இரவு

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர் இந்த உத்தரவை வழங்கினார். துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர், தனது வாகனத்தில் தப்பித்து

மேலும்...
விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?

விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன? 0

🕔25.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண்

திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண் 0

🕔25.Dec 2021

– மப்றூக் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 04ஆக உயர்ந்துள்ளது. நேற்று (24) இரவு 11.40 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த – சார்ஜன் குமார என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பொலிஸ்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி

திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளார். பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட 30 வயதுடைய அழகரட்ணம் நவீணன் என்பவரே இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார் என, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இவர் 2010ஆம் ஆண்டு

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (25) நள்ளிரவுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஆகக் குறைந்தது மூவர் பலியாகியுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் – இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர் என, திருக்கோவில் வைத்தியசாலையிலிருந்ருந்து ஊடகவியலாளர்

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம்

சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம் 0

🕔12.Oct 2020

அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் உட்பட இருவரை, அரச புலனாய்வுப் பிரிவினர் அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்தனர். மேலும், அவர்கள் தயாரித்த 10 துப்பாக்கிகளையும் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களுக்கு

மேலும்...
பொத்தானை: களவுபோகும் நிலம்

பொத்தானை: களவுபோகும் நிலம் 0

🕔7.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –சிறுபான்மை மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாதல், இலங்கையில் நிலவி வரும் நீண்ட காலப் பிரச்சினையாகும். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலத்தினை அரசாங்கமே கையகப்படுத்திக் கொள்கின்றமை ஆக்கிரமிப்பின் உச்ச கட்டமாகும். யுத்தம் நிலவிய காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினர் நேரடியாக

மேலும்...
கஞ்சிகுடியாறு குளம் புனரமைப்பு; அமைச்சர்கள் நசீர், துரைராஜசிங்கம் ஆரம்பித்து வைத்தனர்

கஞ்சிகுடியாறு குளம் புனரமைப்பு; அமைச்சர்கள் நசீர், துரைராஜசிங்கம் ஆரம்பித்து வைத்தனர் 0

🕔18.Aug 2016

– சப்னி அஹமட் – திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்துக்கான புனரமைப்பு வேலைத் திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் கிழக்கு மாகாண நீர்பாசன அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் ஆகியோர் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். உணவு, விவசாய ஸ்தாபனத்தின் செயற்றிட்டத்தின்

மேலும்...
ஆய்வு கூடத்தில் தீ; 40 க்கும் மேற்பட்ட கணிணிகள் நாசம்

ஆய்வு கூடத்தில் தீ; 40 க்கும் மேற்பட்ட கணிணிகள் நாசம் 0

🕔12.Jun 2015

– வி. சுகிர்தகுமார் – திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால்,   40ற்கும் மேற்பட்ட கணணிகள் தீக்கிரையாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். மின்னொழுக்கினால் தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பொதுமக்களின் உதவியுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்