கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள் 0
– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை நிர்மாணத்துக்காக பயனாளி ஒருவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை, அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட, குறித்த பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அந்தப் பணத்தை ‘அபேஸ்’ செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், தெரிவு