மாளிகைக்காட்டில் திடீரென முளைத்த சுற்றுவட்டப் பாதை; விடயம் அறியாத சாரதிகளுக்கு பொலிஸார் தண்டம் 0
– எம்.ஐ.எம். அஸ்ஹர் – மாளிகைக்காடு சந்தியினை சுற்றுவட்ட பாதையாக வீதி போக்குவரத்து பொலிஸார் தன்னிச்சையாக பிரகடனப்படுத்திக் கொண்டு, அவ்வழியாகப் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி, வீதி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளமையால் தண்டனைக்கு உட்படுத்துவதாக கூறி தண்டப்பணம் செலுத்துவதற்கான சிட்டுகளை வழங்கி வருதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த பகுதியை சுற்றுவட்டப் பாதையாக மாற்றியுள்ளதாக பொலிஸார் எதுவித முன்னறிவித்தலையும் வழங்கவில்லை