முன்னாள் எம்.பி ரங்காவை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை நாளை மறுதிம் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட ஸ்ரீ ரங்கா, இன்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.