தாய் மற்றும் மகள் உட்பட நால்வர், நீரில் மூழ்கி பலி 0
ஜின் கங்கையில் மூழ்கி இன்று சனிக்கிழமை நான்கு பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம், காலி – ஹினிதும பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. 39 வயதான தாயொருவரும், அவரின் 14 வயதான மகளும், அந்த பிள்ளையின் 14 வயதான இரு நண்பிகளுமே பலியாகியுள்ளனர். மேற்படி நால்வரும் ஜின் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது, இந்த துயர சம்பவம்