அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள் 0
– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரில் காணப்படும் வாசிகசாலை, அடிப்படை வசதியின்றி இயங்கி வருவதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய வாசிகசாலைக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வாசிக சாலையில் ஒரேயொரு ஊழியரே பணியாற்றி வருகிறார்.