Back to homepage

Tag "சபாநாயகர்"

இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் அங்கிகாரம்

இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் அங்கிகாரம் 0

🕔21.Mar 2024

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையழுத்திட்டுள்ளார். இந்த இரண்டு சட்டமூலங்களும் நேற்று (மார்ச் 20) சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்றன என்று, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இரண்டு சட்டமூலங்களும் 2024 ஆம் ஆண்டின் 15

மேலும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு 0

🕔14.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனைக் கூறினார். “சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று

மேலும்...
அரச அதிகாரிகளை எம்.பிகள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு: தவிர்க்குமாறும் அறிவுறுத்தல்

அரச அதிகாரிகளை எம்.பிகள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு: தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் 0

🕔5.Mar 2024

உயர் பதவிகளை வகிக்கும் அரச அதிகாரிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருவது தொடர்பில் எழுந்துள்ள கவலைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு – சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கொண்டு வந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய சபாநாயகர்; உயர் பதவிகளை வகிக்கும் அரச உத்தியோகத்தர்களை எந்தவித அடிப்படையும் இன்றியும், பல்வேறு சந்தர்ப்பங்களில்

மேலும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு 0

🕔5.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (05) கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ரோஹினி குமாரி விஜேரத்ன, ஹேஷா விதானகே, மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், எம்.ஏ. சுமந்திரன், எஸ்.எம்.

மேலும்...
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு 0

🕔28.Feb 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான

மேலும்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித், சுமந்திரன், பீரிஸ் உள்ளிட்ட எதிரணி கையொப்பம்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித், சுமந்திரன், பீரிஸ் உள்ளிட்ட எதிரணி கையொப்பம் 0

🕔26.Feb 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கையின் அரசியலமைப்பை மீறியதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பல எதிர்க்கட்சிகள் இன்று (26) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டன. இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எம்.ஏ. சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால்

மேலும்...
இணையவழி பாதுகாப்புச் சட்டம், இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது: கையெழுத்திட்டார் சபாநாயகர்

இணையவழி பாதுகாப்புச் சட்டம், இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது: கையெழுத்திட்டார் சபாநாயகர் 0

🕔1.Feb 2024

நாடாளுமன்றத்தால் கடந்த வாரம் அங்கிகரிக்கப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை சபாநாயகம் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (01) சான்றுப்படுத்தி கையெழுத்திட்டார். அதன்படி, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் இணையவழி பாதுகாப்புச் சட்டம் எண் 09 எனும் பெயரில் நடைமுறைக்கு வரும். இரண்டு நாள் விவாதத்துக்குப் பின்னர், சபையில் வாக்கெடுப்பு இல்லாமல் மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

மேலும்...
அஜித் மன்னபெரும எம்.பி, நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தம்

அஜித் மன்னபெரும எம்.பி, நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தம் 0

🕔19.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும – இன்று (10) முதல் நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மன்னபெரும – இன்று தொடக்கம் நாடாளுமன்றத்தில் இருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔18.Oct 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (18) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த 03 ஆம் திகதி வெளியான நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அந்த விடயம் ஒழுங்கு புத்தகத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பயங்கரவாத

மேலும்...
நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு 0

🕔19.Sep 2023

முறையற்ற ஆடையுடன் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற சபைக்குள் அண்மையில் பிரவேசித்த நிலையில், அவர் தனது அங்கியை அங்கேயை கழற்றியதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (19) சபையில் குற்றஞ்சாட்டினார். எனவே இந்த அநாகரீகமான செயலுக்கு எதிராக, குறித்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். சுகாதார

மேலும்...
நீதித்துறை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகரிடம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் கவலை

நீதித்துறை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகரிடம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் கவலை 0

🕔12.Sep 2023

நீதித்துறை தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளியிடும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன

மேலும்...
அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு

அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு 0

🕔4.Jul 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் அண்மையில் சுமார் 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க –

மேலும்...
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார் 0

🕔7.Jun 2023

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் தன்னிடம் கூறியதாக,

மேலும்...
ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு

ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு 0

🕔5.Apr 2023

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவிக்காக, நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு 20.07.2022 அன்று நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளே – அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று

மேலும்...
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார் 0

🕔28.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 15 செப்டம்பர் 1941ஆம் ஆண்டு பிறந்த இவர் மரணிக்கும் போது 82 வயது. இலங்கையின் 17ஆவது சபாநாயகராகவும் ஜோசப் மைக்கல் பெரேரா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், எதிர்கட்சியின் தலைமை கொரடா உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்தார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்