காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம் 0
– பாறுக் ஷிஹான்-ஆயுத குழுவொன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர்