பொய் தகவல் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர்: மோசடியை மறைக்க எடுத்த முயற்சி அம்பலம் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கணக்காளராகப் பணியாற்றும் ஏ.எல்.எம். றிபாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் கோரியிருந்த விவரங்களுக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. தாம் மேற்கொண்ட மோசடியொன்றினை மறைப்பதற்காகவே, இவர் இவ்வாறு பொய்யான தகவலை வழங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது. இதனையடுத்து, பொய்யான தகவலை தனக்கு வழங்கிய