பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா 0
கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். இந்த விருப்பு தேர்தல் முறைமை நாட்டுக்குப் பொருத்தமற்றது.