எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி 0
எரிபொருள் நெருக்கடி காரணமாக நிட்டம்புவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வைத்து நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ – ஹொரகொல்ல எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த போதே