கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு 0
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக, வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 2438 பரீட்சை மத்திய