தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில் 0
– முகம்மத் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் மாணவ குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான இவ்வாண்டுக்குரிய மாணவ யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்று, அதற்கான முடிவுகளும் வெளியானது.