ஆற்றுமண் வியாபாரத்தில் அரசியல்வாதிகள் உள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0
– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கிணங்கவே, ஆற்று மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு, வெளி மாகாணங்களுக்கு மண் கொண்டு செல்லப்படுவதாக, கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டினார். இந்த விடயத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளை, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிறுத்த முடிந்தால் முயற்சி செய்துபாருங்கள் எனவும் அவர் சவால் விடுத்தார்.