👤admin
🕔13.Jul 2017
ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக அஸாத் சாலி கூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதே ஜனாதிபதியுடன் பங்களாதேஷுக்கு, அஸாத் சாலி தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமை மூலம், தான் ஒரு அரசியல் தரகர் என்பதை, அஸாத் மீண்டும் ஒரு முறை சமூகத்திற்கு நிரூபித்து காட்டியுள்ளார் என்று, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர், இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பிடுகையில்; ஞானசார தேரரும் அஸாத் சாலியும் கூட்டாளிகள் என்றும், ஞானசார தேரரை அரசாங்கமே பாதுகாக்கிறது என்ற விடயத்தையும் நாம் கூறும்போது, எம்மை ஏளனம்செய்த அஸாத் சாலி போன்றவர்கள், ஜனாதிபதியே ஞானசார தேரரை பாதுகாப்பதாக பின்னர்பகிரங்கமாக கூறியிருந்தார்கள்.முஸ்லிம் சமூக விடயங்களை வைத்து, அஸாத் சாலியின் தொண்டர்களும், அவர் ஏதோ சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் மாவீரன் என்ற அளவுக்கு ஊடகங்களில் அவரை விளம்பரம் செய்தனர்.
மேலும்...▸