‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு 0
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் செயலாளராக தன்னை அல்லது தான் சொல்பவரை நியமித்தால், அன்னம் சின்னத்தை குறித்த கூட்டணிக்காக வழங்க முடியும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க நிபந்தனை விதித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.