கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம் 0
– நூருள் ஹுதா உமர் – கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனும் பிரேரணை, அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சகி கொண்டு வந்த இந்தப் பிரேரணை – ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.