சினிமா வாய்ப்புக்காக இந்தியாவில் அலைந்திருக்கின்றேன்: கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அமைச்சர் மனோ 0
– அஸ்ரப் ஏ சமத் – நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்தின் கலைஞா்களைப் போன்று, தமிழ் மொழி கலைஞா்களுக்கு பாராட்டும் கௌரவமும் ஒரு போதும் கிடைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த நிலைமை நிச்சயம் மாற வேண்டும் என்றும், காலத்தினைக் கடத்தாது அதனை நிச்சயம் மாற்றிக் காட்டல் வேண்டும் எனவும் கூறிய அமைச்சர்,