Back to homepage

Tag "பொலிஸ்"

பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு

பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு 0

🕔1.Dec 2018

பொலிஸார் 2891 பேருக்கு, வெவ்வேறு வகையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் இதற்காக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு

துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு 0

🕔30.Nov 2018

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – வவுணதீவு பொலிஸ் காவலரணில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் உடல்கள் மீதும், கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் உள்ளதாகத் தெரியவருகிறது. வவுணதீவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். கத்தி போன்ற ஆயுதத்தால் பொலிஸார் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே, அவர்கள்

மேலும்...
அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல்

அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி,

மேலும்...
வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔4.Oct 2018

தான் கடமையாற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக, எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார் எனும் குற்றச்சாட்டில், நேற்று பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் சாஜன்ட் தர உத்தியோகத்தரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மத்துகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தான் கடமையாற்றும்

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல

ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல 0

🕔3.Oct 2017

கல்கிசை பகுதியில் ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் பிக்குகள் உள்ளிட்ட குழுவின் குழப்பம் விளைவித்தபோது, பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் தனக்கு திருப்தியில்லை என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை அலறி மாளிகையில் சந்தித்தபோதே,

மேலும்...
கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில்

கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில் 0

🕔8.Jun 2017

கசிப்பு தயாரித்த பொலிஸ் அதிகாரியொருவர் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில், கசிப்பு மற்றும் கசிப்பு தாயரிக்கும் உபகரணங்கள், ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக ரிவோல்வர் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. இது

மேலும்...
பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு

பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு 0

🕔15.May 2017

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தன்னைத் தாக்கியதாக அதே இடத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.வேலையின் நிமித்தம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுயின் மதுபானம் அருந்துமிடத்தில் மேற்படி இருவரும் தற்செயலாக சந்தித்த போது, அவர்களுக்குள் ஏற்பட்ட

மேலும்...
ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது 0

🕔1.May 2017

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகமான சிறிகொத்தவை நோக்கி இன்று திங்கட்கிழமை மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, யானைச் சின்னம் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஐ.தே.கட்சி தலைமையகத்தின் அருகில் இருந்து அவர் தேவையற்ற விதத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து

மேலும்...
நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் 0

🕔11.Mar 2017

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. சேவை தேவைப்பாட்டின் நிமித்தம் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கும்,

மேலும்...
யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை

யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔24.Oct 2016

– பாறுக் ஷிஹான் –யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், மாணவர்களின் மரணத்துக்கு நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.யாழ் மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து,  குறித்த நடவடிக்கையினை அமைதியான முறையில்  பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.கடந்த 21ஆம் திகதி

மேலும்...
தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது

தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது 0

🕔20.Oct 2016

– பாறுக் ஷிஹான் –கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் போதைப்பொருட்களுடன் இன்று வியாழக்கிழமை மதியம் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஜம்பாட்டா பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். பாஹீம் தலைமையில் சென்ற பொலிஸ் குழு, குறித்த நபரை கைது செய்துள்ளது.இதன்

மேலும்...
பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம் 0

🕔9.Oct 2016

முறைப்பாடுகளை மேற்கொண்டும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,  071 85 920 20 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க முடியும். விஷேடமாக, முறைப்பாடுகள் மேற்கொண்டும் அது தொடர்பில் பொலிசார் நடவடிகை

மேலும்...
இலங்கை பொலிஸ்; பெயரை மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை பொலிஸ்; பெயரை மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔31.Aug 2016

இலங்கை பொலிஸாருக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த பெயரை மாற்றுவதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிணங்க, ‘ஸ்ரீலங்கா பொலிஸ் டெபாட்மென்ட்’ (Sri Lanka Police Department) என்று, இதுவரை காலமும் அழைக்கப்பட்டு வந்த

மேலும்...
சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம்

சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம் 0

🕔25.Jul 2016

– எப். முபாரக் – முஸ்லிம் பெண்ணொருவரின் பெருந்தொகைப் பணத்துடன் தவறவிட்ட கைப்பையினை, சிங்கள பெண்ணொருவர் கண்டெடுத்து  இன்று திங்கட்கிழமை ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கைப்பையினுள் 46, 500 ரூபாய் பணம் இருந்ததாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணின் கைப்பை, 46, 500 ரூபாய் பணத்துடன் இன்று

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம் 0

🕔23.Jun 2016

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையினாலேயே, இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. கடமையிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமது துப்பாக்கிகளைப் பரிசோதிக்கும் போதே, இவ்வாறு துப்பாக்கி வெடித்துள்ளது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்