Back to homepage

Tag "பொலிஸ்"

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது 0

🕔28.Nov 2023

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதானார்.

மேலும்...
பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் 0

🕔17.Oct 2023

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பராமரிக்கப்படுவதாக – பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம்

மேலும்...
பயணித்த பஸ்ஸை  நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார்

பயணித்த பஸ்ஸை நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார் 0

🕔24.Sep 2023

இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் சாரதியொருவர் கடமை நேரத்தில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பகுதியில் வைத்து 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் இன்று (24) காலை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை, வேன் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச்

மேலும்...
இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம் 0

🕔10.Sep 2023

பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளைஞரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்பவர், கல்கிசையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என கண்டறிவதற்கான விசாரணைகளை

மேலும்...
போலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

போலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது 0

🕔7.Sep 2023

பாதுக்க பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறி, பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்கத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொவருவரை மொரோந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்து வருவதோடு, முகநூல் மூலம் சந்தேக நபருடன் நட்பாக இருந்துள்ளார். மொறொந்துடுவையில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்த சந்தேக நபர், தான் பாதுக்க

மேலும்...
போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி

போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி 0

🕔7.Sep 2023

‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவை விடுதலை செய்யுமாறு, அதிகாரம் கொண்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அவரின் மகனும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ஹரக் கட்டா, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால்

மேலும்...
ராஜகுமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு விளக்க மறியல்

ராஜகுமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு விளக்க மறியல் 0

🕔29.Aug 2023

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த – வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரை – செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி,

மேலும்...
‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது 0

🕔11.Aug 2023

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அடுருப்பு வீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு அருகில் வைத்து மேற்படி கொன்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சட்டவிரோத போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பதோடு, ‘ஐஸ்’ போதைப் பொருளை உட்கொண்டாரா என்பதை அறிய வைத்திய பரிசோதனைக்கு

மேலும்...
மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரண்

மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரண் 0

🕔7.Aug 2023

– பாறுக் ஷிஹான் – அரச பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை – பொலிஸார் தேடி வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) மாலை தனது சட்டத்தரணி

மேலும்...
போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம் 0

🕔4.Aug 2023

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய தபாலக வீதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (3) இரவு 11 மணியளவில்

மேலும்...
துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது

துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது 0

🕔12.Jul 2023

துருக்கிய யுவதியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் ராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்த யுவதியே இவ்வாறு தொல்லைக்கு ஆளானார். சந்தேக நபர் மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் அடங்கிய குழுவொன்று கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில்

மேலும்...
தம்பி குத்தியதில் அண்ணன் பலி

தம்பி குத்தியதில் அண்ணன் பலி 0

🕔7.Jul 2023

இருபத்து ஐந்து வயதுடைய நபரொருவர் நேற்று (06) இரவு பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து அவரது இளைய சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாக்குவாதத்தை அடுத்து இளைய சகோதரன் தனது மூத்த சகோதரனை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விசாரணையில்

மேலும்...
சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது

சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது 0

🕔27.Jun 2023

– பாறுக் ஷிஹான் – புலனாய்வுகளின் போது, சந்தேக நபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும் இழிவான நடத்தாமலும் அடிப்படை உரிமையை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.வலியுறுத்தினார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்தையொட்டி கல்முனை பிராந்தியத்தலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்

ஈஸ்டர் தின தாக்குதல்: கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம் 0

🕔16.Jun 2023

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பாக – கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில், கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய – இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட

மேலும்...
ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்

ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் 0

🕔27.May 2023

பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பொறுப்பதிகாரி களப் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த 41 வயதான ஆர். ராஜகுமாரி என்ற பெண் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்