பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி 0
– அஹமட் – பாலமுனை சிறுவர் பூங்காவை புனரமைப்பதற்காக 05 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, புனரமைப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிளார் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். நேற்றைய தினம் பாலமுனை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனமொன்று உடைந்து விழுந்ததால், அங்கு விளையாடிக்கொண்டிருந்த