சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0
பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வைத்து, அடையாளம் தெரியாத நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியானார். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டில் காயடைந்த இருவரும், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்