எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம் 0
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள் – மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற்படி தகவல் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.